வரதராசன் பாக்கள்
வண்ணப்பாடல்...சந்தக் குழிப்பு :
**************
தனத்த தானன தானன தானன
தத்தத் தனதன தந்தன தந்தன
தனதன தனதன தனதன தனதன.
- தனதானா
எடுத்த யாவையு மேநிறை வேறிட
எற்றைக் குளமொழி செந்தமி ழொன்றியென்
இணைவுற வருதுணை இனியெவர் பெறுபவ. - ரறியேனே.
எலிக்கு
ழாமரு போரிடு மோசிலர்
வெற்றித் தளமிதை வென்றிட வஞ்சியு
மிழிவொடு மறுதள மமைவதி லொருவெறி - அடைவாரே
கெடுத்த லேயவர் சீழ்மன மாகிட
இற்றைக் கிவர்புரி யுஞ்செயல் நஞ்சொடு
கெடுதலை நினைகுவ ரிவர்நிலை யவர்மன. -முணராதோ?
கிடைக்கு மோவிவர் மேனிலை யோவென
எச்சிற் கவிகொடு தங்கவி தந்தெதிர்
கெடுவுணர் வுடையவர் கவியென அலைகுவ. - ரறிவேனே.
தடுத்த லேயிலை தீநினை வோர்களின்
வெற்றுச் செயலினை வென்றிடு மென்பணி
தகுவழி யிதுவென அறிகில ரவர்நிலை - நிலையாதே
தகிக்கு மோர்வெயி லோனவ னீளலில்
நிற்றற் கெவருளர் எஞ்சலு மிஞ்சலு
தவிடென அலைவுறு மதனிலை அழிவுறு - மொருநாளில்
நடுக்கி யோடுவர் நாடுவ ரோவினி
நச்சுக் கவிகளு மொண்டுத லிங்கிலை
நறுமொழி தமிழதன் நனிநிலை யறிகுவர் - விரைவாக
நடிப்பொ டேயெவர் நாடினும் வீழுவர்
பட்டுத் தமிழ்மகள் வெஞ்சின மிஞ்சிட
நகுபவ ரனைவரும் தொகுதொகு தொகுவென . - அழிவாரே!
★★★
No comments:
Post a Comment