பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

31 Jan 2016

கம்பன் கவிநயம் 1 - கம்பனும் - துளசிதாசரும்


வான்மீகியை மூலமாகக் கொண்டு கம்பர் தன் காப்பியத்தைப் படைக்கும் காலத்தில் பல மாறுதல்களுக்குட்பட்ட ராமன் வரலாறு அவருடைய எழுத்திலும் எதிரொலித்தது..இராமனை ஒரு மனிதனாகவே காட்டுவார் வான்மீகி. ஆனால் கம்பரின் காலத்தில் ராமன் கடவுளாக வணங்கப்பட்டிருந்தான். எனவே கம்பர் ராமனைக் கடவுளாகவே காட்டினார்.
இப்படி பல வேறுபாடுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும்,
கம்பர் பல நிலைகளில் மற்ற ராமாயண ஆசிரியர்களிடமிருந்தும் தனித்த சிறப்புடன் நிற்கிறார். அவ்வாறான ஒரு நிகழ்வைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முயன்று பார்க்கலாம் 3 (முற்று முடுகு வெண்பா)


அன்பு நண்பர்களே! கவிஞர்களே! 
"முயன்று பார்க்கலாம் " : 3 இல் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இப்பயிற்சியில் நாம் காணப்போவது "முற்று முடுகு " வெண்பா ஆகும்.
முடுகியலைப் பற்றியும், சந்த இலக்கணத்தைப் பற்றியும் முயன்று பார்க்கலாம் - 2 இல் விளக்கப்பட்டிருந்ததை மீண்டும் நினைவில் கொண்டு, அந்த இலக்கணத்தின்படி இங்கே கொடுக்கப்பட்டுள்ள பாடலைச் சான்றாகக் கொண்டு உங்கள் பயிற்சிப் பாடலை, இப்பதிவின் கருத்துப் பகுதியில் (Comment) மட்டும் பதியவும்.
முன் கூறப்பட்ட இலக்கணத்தையும், விளக்கத்தையும் புதிய வரவான நம் சோலைக் கவிஞர்கள் அறியும் பொருட்டு அதன் இணைப்பைக் கீழே கொடுத்துள்ளேன். அதைச் சொடுக்கிக் காணவும்.

30 Jan 2016

பாட்டியற்றுக : 19 இன் தொகுப்பு


அன்பு நண்பர்களே! கவிஞர்களே! பாட்டியற்றுக : 19 இன் தொகுப்பு அப்பாடல்களை இயற்றிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
புதிதாகப் பல கவிஞர்கள் இணைந்திருப்பது மனத்திற்கு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தருகிறது.
பைந்தமிழ்ச் சோலையில் விருப்பத்துடன் பலர் இணைவது, தமிழ் மரபைக் கற்கப் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதையே காட்டுகிறது.மகிழ்ச்சி.
கொடுக்கப்பட்டுள்ள எண்கள் தரவரிசைக்குரியதல்ல. கவிஞர் அனுப்பிய வரிசைக்குரியதே.
கவிஞர்களை வாழ்த்துங்கள். 
கவிதைகளைப் படியுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள்.
பாட்டியற்றுக : 19

17 Jan 2016

கவியரங்கத் தலைமைக் கவிதை



(தலைப்பு)
போற்றப்பட வேண்டியது...
கவியரங்கத் தலைமைக் கவிதை
"""""""""""""""""""""""""""""""""
*தமிழ் வாழ்த்து.*
(நேரிசை வெண்பா)
முந்தைப் பழமொழியாம் மூப்பிலா முத்தமிழாம்
சிந்தை குளிர்விக்கும் தேமொழியாம் - முந்துவையே
உன்றன் அடிவணங்கி ஓரரங்கம் யாமியற்ற
இன்றமிழே காப்பாய் இரு!

15) கடலிலே செந்தூள் !


பைந்தமிழ்ச் சோலைவசிகளுக்கு வணக்கம் !
தங்கள் அனைவரையும் இந்த ‪#‎இலக்கியத்_தேன்துளிகள்‬ தொடரில் சந்திப்பதில் ஆனந்தம் அடைகின்றேன். இதோ இவ்வாரத்துத் துளி !
15) கடலிலே செந்தூள் !
மிகவும் சுத்தமான வெண்மை நிறம் கொண்ட பாற்கடல் மீது அன்று திடீரெனச் சிவப்பு நிறத்தில் துகள்கள் பறந்தன. "அவை ஏன் பறந்தன அதுவும் கடலுக்கு நடுவில் திடீரென எப்படிப் பரவின?" என்று அனைவரும் ஐயம் கொள்ளக் கூடும் அதற்கான காரணத்தைக் கவிஞர் பின்னால் இப்படிக் கூறுகின்றார்.
மத்தகத்தைக் கொண்ட ஒரு ஆண் யானையைக் கொன்று அதன் தோலினை உரித்துப் போர்த்திய சிவபெருமான் தன்னுடன் சண்டையிட வந்த அழகில் சிறந்த ஆடவனான மன்மதனோடு போரிட்டு வென்று முப்புரத்தில் அவனை நெற்றிக் கண்ணின் சுடரால் எரித்தான். இந்தச் செய்தி எட்டு திக்கும் பரவி அண்டம் முழுவதும் நிறைந்தது.

பாட்டியற்றுக : 20 இன் தொகுப்பு


அன்பு நண்பர்களே! கவிஞர்களே! 
பாட்டியற்றுக : 20 இன் தொகுப்பு அப்பாடல்களை இயற்றிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது..புதிதாகப் பல கவிஞர்கள் இணைந்திருப்பது மனத்திற்கு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தருகிறது.பைந்தமிழ்ச் சோலையில் விருப்பத்துடன் பலர் இணைவது, தமிழ் மரபைக் கற்கப் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதையே காட்டுகிறது. கொடுக்கப்பட்டுள்ள எண்கள் தரவரிசைக்குரியதல்ல. கவிஞர் அனுப்பிய வரிசைக்குரியதே.
கவிஞர்களை வாழ்த்துங்கள். 
கவிதைகளைப் படியுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள்.
பாட்டியற்றுக : 20

16 Jan 2016

பாட்டியற்றுக - 20


நண்பர்களே.! கவிஞர்களே.! அறிஞர் பலரும் பாராட்டும் 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 20" இதோ.!
"இப்பகுதியில் கொடுக்கப்படும் இலக்கணக் குறிப்புகள், புதிதாகக் கற்பவர்கள் அஞ்சி ஒதுங்காமல், குழப்பமடையாவண்ணம் எளிதில் கற்கும் விதத்தில் (பாட்டியற்றும் வகையில்) தேவையானவை மட்டுமே கொடுக்கப்படுகின்றன. 
மேல்விளக்கம் தேவைப்படுவோர்
முன்னோர் யாப்பியல் நூல்களைப் பார்க்கவும்."
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
*** *** *** ***
பாட்டியற்றுக - 20

10 Jan 2016

என்னைச் செதுக்கிய,..



முந்நூறு நாள்சுமந்து முழுதாய்க் காத்து
        முறையாக உணவோடு காற்றும் தந்தே
எந்நினைவும் இல்லாமல் என்னை மட்டும்
        எப்போதும் நினைந்துருகி உயிர்நீ ராகச்
செந்நீரைத் தந்தென்னை உயிர்வ ளர்த்துத்
        தேகவலி வந்தாலும் பொறுத்துக் கொண்டு
கண்ணேறு தாக்காமல் காவல் செய்து
        காலமெலாம் எனைக்காத்த தாயே தெய்வம்!

பாட்டியற்றுக - 19


நண்பர்களே.! கவிஞர்களே.! அறிஞர் பலரும் பாராட்டும் 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 19" இதோ.!
"இப்பகுதியில் கொடுக்கப்படும் இலக்கணக் குறிப்புகள், புதிதாகக் கற்பவர்கள் அஞ்சி ஒதுங்காமல், குழப்பமடையாவண்ணம் எளிதில் கற்கும் விதத்தில் (பாட்டியற்றும் வகையில்) தேவையானவை மட்டுமே கொடுக்கப்படுகின்றன. 
மேல்விளக்கம் தேவைப்படுவோர்
முன்னோர் யாப்பியல் நூல்களைப் பார்க்கவும்."
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
*** *** *** ***
பாட்டியற்றுக - 19

14) மாலைக் காலம்


வணக்கம் தமிழுறவுகளே !
அனைவரையும் இந்த ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ என்னும் தொடரில் சந்திப்பதில் களிப்படைகின்றேன். இதோ இவ்வாரத்துத் தேன்துளி,
15) மாலைக் காலம்
சுட்டெரித்துக் கொண்டிருந்த ஒளி மிகுந்த பகல் மாய்ந்து அழிந்துவிட திண்மை வாய்ந்த ஏழு குதிரைகளைப் பூட்டிய அழகுடைய தேரினை உடைய சூரியன் என்பவன் மேற்கில் தெரிந்துகொண்டிருக்கும் மலைகளின் கீழே சென்று மடியலானான். மான் கூட்டங்களும் காட்டு நிலங்களில் மேய்வதை நிருத்தி அடர்ந்த மரப் பந்தல்களுக்கு மத்தியில் சென்று கூடத் துவங்கின, மக்கள் நலமோடு வாழத் தனது உதிரத்தையே பாலாகத் தருகின்ற வெண்மைப் பசுக்கள் தனது கன்றுகளைக் கூக்குரல் இட்டு அழைக்கத் துவங்கின, பின்பு அவைகள் தொழுவங்களைச் சென்றடையத் துவங்கின,

8 Jan 2016

பாட்டியற்றுக : 18 இன் தொகுப்பு


அன்பு நண்பர்களே! மிகச் சிறப்பாக நடந்து முடிந்த இந்தப் பயிற்சி அனைவருக்கும் மிகுந்த நிறைவைக் கொடுத்திருக்கும்.
இத்தொகுப்புக் கவிஞர்கள் அனுப்பிய வரிசையின்படியே வெளியிடப்படுகிறது. தரவரிசைப் படியன்று.
வாழ்த்துங்கள்! கருத்தைக் கூறுங்கள்! பகிருங்கள்.
பயிற்சியில் கலந்து கொள்ளாத மற்ற உறுப்பினர்கள் இதையாவது செய்யலாமே!
பாட்டியற்றுக -18
கட்டளைக் கலிப்பா
1. கவிஞர் விவேக் பாரதி
காத லாந்தவம் காசினி மேல்புதுக்
கன்னி மார்களும் ஆக்கிடும் யாகமாம்
சாத லென்னுமோர் எல்லையைத் தாண்டியும்
சாத னைபல செய்திட ஏற்றதாய்
மோதல் தாண்டியும் மோட்சமுந் தேடியும்
மோன மாம்நிலை யஃதிலி னித்திட
நாத மோங்கிட நானிலம் போற்றிட 
நாமும் செய்குவம் நல்லதோர் காதலே ! 

பாட்டியற்றுக - 18


நண்பர்களே.! கவிஞர்களே.! 
அறிஞர் பலரும் பாராட்டும் பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 18" இதோ.!

"இப்பகுதியில் கொடுக்கப்படும் இலக்கணக் குறிப்புகள், புதிதாகக் கற்பவர்கள் அஞ்சி ஒதுங்காமல், குழப்பமடையாவண்ணம் எளிதில் கற்கும் விதத்தில் (பாட்டியற்றும் வகையில்) தேவையானவை மட்டுமே கொடுக்கப்படுகின்றன. 
மேல்விளக்கம் தேவைப்படுவோர்

13) அறியார் பிழை !


வணக்கம் அன்புடையவர்களே !
தங்கள் அனைவரையும் ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் சந்திப்பதில் ஆனந்தம் கொள்கின்றேன். இதோ இவ்வாரத்துத் தேன்துளி.
14) அறியார் பிழை !
அர்ப்பமான காசுக்காக ஒரு பச்சைத் துரோகியால் காட்டிக் கொடுக்கப்பட்ட அவர், இங்கே சிலுவையில் அறையப்பட்டு முள் கிரிடம் அணிந்து கிடக்கின்றார். கயவர் பலரால் சாட்டையால் அடிக்கப் பற்ற இரத்த காயங்கள் மேனியைப் புண்படுத்த, அவர் சிலுவையில் கிடக்கின்றார். ஆணிகளால் அறையப்பட்டு கைகளிலும் கால்களிலும் ரத்தம் வடிய வடியச் சோர்ந்து கிடக்கின்றார்.

5 Jan 2016

பாட்டியற்றுக : 17 இன் தொகுப்பு


அன்பு நண்பர்களே! கவிஞர்களே! பாட்டியற்றுக : 17 இன் தொகுப்பு அப்பாடல்களை இயற்றிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண்கள் தரவரிசையன்று. கவிஞர்கள் பாடலை அனுப்பிய வரிசை எண்களாகும்.
கவிஞர்களை வாழ்த்துங்கள். கவிதைகளைப் படியுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள்.
பாட்டியற்றுக - 17

12) காக்கைக்கு லஞ்சம்


வணக்கம் அன்புப் பாவலர்களே
அனைவரையும் ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் தங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றேன். இதோ இவ்வாரத் தேன் துளி
13) காக்கைக்கு லஞ்சம்
காலையில் எழுந்து தன் வீட்டின் வாசலில் வந்து குழுமியிருந்த காக்கைக் கூட்டத்தை அவள் நோக்குகின்றாள். அவைகளிடம் ஏதோ பேச முனைகின்றாள். கண்களில் ஒரு வித ஏக்கம் தழுவ அவள் காக்கைகளைப் பார்கின்றாள். அந்தக் காக்கைக் கூட்டத்தில் ஒற்றைக் காக்கையை மட்டும் அவள் நோக்கி பேசத் துவங்குகின்றாள்.

பாட்டியற்றுக 17,


நண்பர்களே.! கவிஞர்களே.! அறிஞர் பலரும் பாராட்டும் 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 17" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 

*** *** *** ***
பாட்டியற்றுக - 17